இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

எதிர்நீச்சல் தொடரில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அதுமுதலே அவர் நடித்து வந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் இனி யாரால் நடிக்க முடியுமென பெரிய விவாதமே சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஆதிகுணசேகரனாக பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளதாக செய்திகள் வைரலாகி வந்தது.
இதுகுறித்து தற்போது பேசியுள்ள வேல ராமமூர்த்தி, 'சீரியலில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை. மாரிமுத்து மறைவுக்கு பிறகு என்னிடம் சேனல் தரப்பிலிருந்து பேசினார்கள். சினிமாவில் பிசியாக நடிப்பதால் முடிவு எதுவும் எடுக்கவில்லை. ஆனாலும் சில நண்பர்கள் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சொல்லி என்னை நடிக்க சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.