தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் மாரிமுத்து. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாகவும், மீம் மெட்டீரியலாகவும் இணையதளத்தில் டிரெண்டாகி வரும் மாரிமுத்து, எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர், 'திருச்செல்வத்திடம் மூன்று மணிநேரம் கதை கேட்டு தான் நடிக்கவே ஒப்புகொண்டேன். இந்த சீரியல் 1500 எபிசோடை கடக்கும் என திருச்செல்வம் கூறியிருக்கிறார். அதனால் வேறு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இல்லை. வேறு வாய்ப்புகள் அமைந்தால் பார்க்கலாம். வில்லன்களை பெண்கள் ரசிப்பது ரொம்பவே ஆச்சரியம். ஆனால், இந்த சீரியலால் பெண்களுக்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது.' என்று கூறியுள்ளார். மாரிமுத்து தற்போது சினிமாவில் இந்தியன் 2, ஜெயிலர் உட்பட சில பெரிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.