இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சூப்பர் சிங்கர் பிரபலமான ராஜலெட்சுமி, சின்னத்திரை ஜோடியாக இருந்து பிறகு பிரிந்த விஷ்ணுகாந்த் - சம்யுக்தா விவகாரம் குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார். கணவன், மனைவி தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை சோஷியல் மீடியாவில் பேசுவது முறையா? என்று கேட்டுள்ள ராஜலெட்சுமி, 'தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகத்தில் கொண்டு வந்து பேசுவது கேவலம். இதற்கு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், பக்குவமில்லாமல் பேசி அடுத்தவர்களின் அனுதாபத்தை பெற துடிக்கிறார்கள்' என இருவரையும் லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். இதனையடுத்து ராஜலெட்சுமியின் கருத்தை ஏற்றுக்கொண்ட பலரும், சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும் பிரச்னையை தீர்க்க முயலாமல் மாறி மாறி சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டு வருவதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.