லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் இணைந்து நடித்த விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில், திருமணமான இரண்டே மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமிலும் ஒருவரையொருவர் அன்பாலோவ் செய்துள்ளதுடன் தங்களது திருமண புகைப்படங்களையும், காதலிக்கும் போது ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்யுக்தா வெளியிட்ட சமீபத்திய பதிவில், 'எனது அருமை ஹேட்டர்ஸ்…. நீங்கள் நினைத்தது போலவே நடந்துவிட்டதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதேசமயம் இனி தான் என் வாழ்க்கை ஆரம்பமாகிறது. இனிமேல் என் வாழ்வில் என்ன நடக்கப்போகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியாது. எனவே, ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியை கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவின் மூலம் விஷ்ணுகாந்தை விட்டு பிரிவும் முடிவை சம்யுக்தா தீர்க்கமாக எடுத்துவிட்டதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.