25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
விஜய் டிவியின் 'செந்தூரப்பூவே' தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரியானார் ஸ்ரீநிதி. நன்றாக சென்று கொண்டிருந்த அந்த தொடரானது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக முதலில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் ஒளிபரப்பாக ஆரம்பித்த போது மக்கள் மத்தியில் அந்த தொடருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அந்த சீரியல் முடித்து வைக்கப்பட்டது. அதேசமயம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்த ஸ்ரீநிதிக்கு விஜய் டிவியிலேயே புதிய சீரியலில் வாய்ப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்குபிறகு வந்த புது சீரியல்களில் கூட வேறு ஹீரோயின்களே கமிட்டாகியிருந்தனர்.
இந்நிலையில் தான் ஸ்ரீநிதி ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு தாவினார். இப்போது அந்த சேனலின் பிரபல நடன நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஸ்ரீநிதி தற்போது அதே சேனலில் மிக விரைவில் வெளியாகவுள்ள 'தெய்வம் தந்த பூவே' தொடரின் சீசன் 2 வில் ஹீரோயினாக நடிக்கிறார். முன்னதாக முதல் சீசனில் நிஷ்மா செங்கப்பா ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி மாற்றப்பட்டுள்ளார்.