மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஹிந்தியில் 'பவால்', 'சிச்சோரே' ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது 'ராமாயணா' எனும் படத்தை இயக்கி வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யஷ் நடிக்கின்றனர். அதேபோல், அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த படத்தில் சீதாவாக நடிப்பதற்கான ஆடிஷனில் முதலில் 'கேஜிஎப்' படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி பங்கேற்றிருந்தார். ஆனால், ஆடிஷனில் அவர் தேர்வாகவில்லை; அவருக்கு பதிலாக சாய் பல்லவி சீதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு நழுவிய வாய்ப்பு குறித்து ஸ்ரீநிதி ஷெட்டி கூறியதாவது: ராமாயணா படத்தில் சீதா வேடத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றிருந்தேன். 3 காட்சிகளை நடித்துக்காட்ட சொன்னார்கள். என் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது.
அடுத்த ஓரிரு மாதங்களில் கேஜிஎப் படம் வெளியானது. அதில் யஷ் ஜோடியாக நடித்திருந்த நிலையில், ராமாயணா படத்தில் யஷ் ராவணனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ராவணனாக யஷூம், சீதாவாக நானும் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதற்காக படக்குழுவினர் எனக்கு வாய்ப்பளிக்காமல் விட்டிருக்கலாம். அதன்பிறகு, சீதாவாக சாய் பல்லவி தேர்வானதாக கூறப்பட்டது. அந்த கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி நல்ல சாய்ஸ் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.