மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கிய படம் தேஜாவு. இதில் அருள்நிதி, ஸ்ருதி வெங்கட், மதுமிதா, நடிகர்கள் அச்யுத் குமார், காளி வெங்கட் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஒருவர் கற்பனையாக எழுதும் அனைத்து சம்பவங்களும் யதார்த்த வாழ்வில் நிகழ்வதைச் சுற்றி இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எழுத்தாளர் சுப்பிரமணியாக நடிகர் அச்யுத் குமார் நடித்துள்ளார். அவர் எழுதும் கற்பனை கதையின் கதாபாத்திரங்கள் அனைத்தும் யதார்த்த வாழ்வில் தன்னை வந்து அச்சுறுத்துவதாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். அவர் கூறுவதை அங்குள்ள யாரும் நம்பவில்லை.
இந்த நிலையில், கடத்தப்பட்ட ஒரு பெண் தப்பி வந்து காவல் நிலையத்தில், தான் கடத்தப்பட்டதில் எழுத்தாளர் சுப்பிரமணிக்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுகிறார். அப்போது, போலீஸ் அதிகாரி மதுமிதா மகள் ஸ்ம்ருதி வெங்கட் கடத்தப்படுகிறார். அவளை கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரி விக்ரம் குமாராக நடிகர் அருள்நிதி வருகிறார். சுப்ரமணியின் கற்பனை கதை எப்படி யதார்த்த வாழ்வில் உயிர் பெறுகிறது என்பதும் விக்ரம் தனது விசாரணையில் அவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுமே இப்படத்தின் மீதிக் கதையாகும்.
கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் காந்தி ஜெயந்தி சிறப்பு திரைப்படமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.