தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
சினிமா பாடலாசிரியரான சினேகனுக்கும் சின்னத்திரை நடிகை ஜெயலெட்சுமிக்கும் இடையே சமீபத்தில் சினேகம் அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் பிரச்னை எழுந்தது. இதனையடுத்து அறக்கட்டளையின் மூலம் பணம் மோசடி செய்ததாக கூறி ஜெயலெட்சுமி மீது சினேகன் புகார் கொடுத்தார். பதிலுக்கு அது பொய்யான குற்றச்சாட்டு என ஜெயலெட்சுமியும் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலெட்சுமி சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அப்போது, 'சினேகம் அறக்கட்டளை மூலம் பணமோசடி செய்ததாக சினேகன் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். மேலும், இது தொடர்பில் அவர் என்னிடம் பேச வந்தபோது அவரை நான் தனிமையில் காபி சாப்பிட அழைத்ததாகவும் பொய் கூறி வருகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, நீதி வேண்டி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தற்போது என் மீது பொய் புகார் அளித்ததற்காகவும், அவதூறாக பேசியதற்காகவும் சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சமூகவலைத்தளத்தில் என்னை பற்றி அவதூறாக பேசி வரும் அனைவருக்கும் பொருந்தும்' என்றும் ஜெயலெட்சுமி கூறியுள்ளார்.