அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சோஷியல் மீடியாவில் எதையாவது பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார் ஸ்ரீநிதி. அவர் சமீபத்தில் தனது தோழியும் சக நடிகையுமான நக்ஷத்திராவை பற்றி பேசிய தகவல்கள் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நக்ஷத்திரா, ஸ்ரீநிதி மனக்குழப்பத்தில் இருக்கிறார். அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்திருந்தார். இருப்பினும் நக்ஷத்திராவின் வருங்கால கணவர் யார்? உண்மையில் நக்ஷத்திரா மாட்டிக்கொண்டு தவிக்கிறாரா என்ற கேள்விகள் சில ரசிகர்களிடம் இருந்தது. இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நக்ஷத்திராவின் வருங்கால கணவரே விளக்கமளித்துள்ளார்.
நக்ஷத்திராவின் காதலர் பெயர் விஷ்வா. பொதுவெளியில் அதிகம் அறியப்படதா இவர், சினிமா தயாரிப்பாளரான சேவியர் ப்ரிட்டோ குடும்பத்திற்கு நெருங்கிய நண்பரும் ஆவார். அந்த வகையில் ஜீ தமிழில் சேவியர் ப்ரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் சீரியல்களில் நிர்வாக தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படித்தான் ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்த நக்ஷத்திராவுக்கும் விஷ்வாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநிதியின் சர்ச்சை கருத்துகளுக்கு அண்மையில் பதிலளித்துள்ள விஷ்வா, 'சமீப காலமாக ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் ஏதேதோ பேசி வருகிறார். என் குடும்பத்தை பற்றி அவர் சொன்னது எதுவுமே உண்மை கிடையாது. விரைவில் நாங்கள் முறைப்படி எங்கள் திருமணம் குறித்து மீடியாவுக்கு அறிவிக்க இருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.