இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி கலைஞராக நுழைந்தவர் ராமர். அதன் பின் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் காமெடியில் அசத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஸ்பூப் செய்தபோது இவர் பேசிய 'என்னம்மா இப்படி பன்றீங்களே மா' டயலாக் வேற லெவலில் ரீச்சானது. இதனையடுத்து இவரை என்னம்மா ராமர் என்றே பலரும் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
ராமருக்கு கிருஷ்ணவேனி என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவரின் சொந்த ஊர் மதுரை பக்கத்தில் இருக்கும் மேலூர். இதைத்தவிர ராமர் பற்றிய வேறு எந்த தகவலும் ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது. இந்நிலையில், ராமர் ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மதுரை எம்.பி வெங்கடேசன், ராமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். ராமரை இத்தனை நாள் வரை தொலைக்காட்சி நடிகர் மட்டுமே நினைத்து வந்த ரசிகர்களுக்கு அவர் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.