சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி கலைஞராக நுழைந்தவர் ராமர். அதன் பின் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் காமெடியில் அசத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஸ்பூப் செய்தபோது இவர் பேசிய 'என்னம்மா இப்படி பன்றீங்களே மா' டயலாக் வேற லெவலில் ரீச்சானது. இதனையடுத்து இவரை என்னம்மா ராமர் என்றே பலரும் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
ராமருக்கு கிருஷ்ணவேனி என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவரின் சொந்த ஊர் மதுரை பக்கத்தில் இருக்கும் மேலூர். இதைத்தவிர ராமர் பற்றிய வேறு எந்த தகவலும் ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது. இந்நிலையில், ராமர் ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மதுரை எம்.பி வெங்கடேசன், ராமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். ராமரை இத்தனை நாள் வரை தொலைக்காட்சி நடிகர் மட்டுமே நினைத்து வந்த ரசிகர்களுக்கு அவர் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.