பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஜீ தமிழ் சேனலில் 'சூப்பர் குயின்' நிகழ்ச்சி கடந்த ஜனவரி 16ம் தேதி துவங்கியது. இது ஒரு வகையில் சின்னத்திரை நடிகைகளின் அழகிப்போட்டி என்று கருதும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை ராதா மற்றும் நடிகர் நகுல் செயல்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிபோட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் நடிகை பார்வதி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். தேஜஸ்வனி சில புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை தவறவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆயிஷா மூன்றாம் இடம் பிடித்தார்.
பார்வதி தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தை தனது பெற்றோருடன் பெற்றுக் கொண்டார். தனக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை தனது தாயாருக்கு அணிவித்து மகிழ்ந்தார். ஏராளமான பரிசு பொருட்களும் அவருக்கு வழங்கப்பட்டது. பார்வதி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானியின் மருமகளாக நடித்து வருகிறார். அதோடு தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.