விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! | ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? | செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் |
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத், பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அனிதா சம்பத் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அனிதா சம்பத், ‛வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா.பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு. இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும், நிறைய உழைப்பும், நிறைய மெனக்கெடல்களும் கடந்து சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம். நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும். இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்.' என பதிவிட்டுள்ளார்.