ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் ரக்ஷா ஹோலா. பெங்களூரை சேர்ந்த ரக்ஷா, நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் கதாநாயகியாக தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார். அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அந்த தொடர் புதிய மாற்றங்களுடன் ஒளிபரப்ப தொடங்கிய போது, ரக்ஷா ஹோலா தொடரிலிருந்து விலகினார். இதனையடுத்து அவர் ஜீ தமிழின் 'அன்பே சிவம்' தொடரில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே சிவம் தொடரும் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது ரக்ஷா ஹோலா அதிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விலகியதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அவர் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற தகவலை தொலைக்காட்சி நிறுவனம் மிக விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




