மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றானது ஆக்சிஸ் பிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு. 2015-ம் ஆண்டில் வெளிவந்த 'உறுமீன்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து 'மரகத நாணயம்', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'ராட்சசன்', 'ஓ மை கடவுளே', 'பேச்சிலர்', 'கள்வன்' உள்ளிட்ட பல வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படங்களை தயாரித்தார்.
சில மாதங்களாக இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். நள்ளிரவில்(செப்., 9) சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
டில்லி பாபு இப்போதும் கூட தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க சில இயக்குனர்களுடன் ஒப்பந்தம் போட்டு வந்தார். இதுதவிர தனது மகவ் தேவ்வை ஹீரோவாக்கி 'வளையம்' என்ற பெயரில் ஒரு படத்தினை தயாரித்து வந்தார். மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது அவரது கனவும். ஆனால் அந்த கனவு முழுமை அடையும் முன்பே அவர் மறைந்துவிட்டார்.