ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கன்னட திரைப்பட நடிகையான சுப ரக்ஷா ‛கார்த்திகை தீபம்' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் வில்லியாக மிரட்டி வந்த இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்து வந்தது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ‛ஆசிய ஐகான் விருது' நிகழ்விலும் சுப ரக்ஷாவுக்கு சிறந்த மாடல் மற்றும் நடிகைக்கான விருது கிடைத்தது.
இந்நிலையில், கார்த்திகை தீபம் தொடரிலிருந்து சுப ரக்ஷா திடீரென விலகினார். அவருக்கு பதிலாக தற்போது சாந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார். சுப ரக்ஷா எதற்காக சீரியலை விட்டு விலகினார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்ப, தற்போது அதற்கு பதிலளித்துள்ள சுப ரக்ஷா, 'ரசிகர்களின் அன்பை பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது கன்னடத்தில் படம் ஒன்றில் கமிட்டாகியிருப்பதால் கார்த்திகை தீபம் தொடரிலிருந்து விலகி இருக்கிறேன். விரைவிலேயே புதிய சீரியலில் உங்களை சந்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.




