300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சரண்யா துராடி. செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது சினிமா, சீரியல்களில் நடிகையாக ஜொலித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை என்று தான் இன்று வரை ரசிகர்கள் நம்பி வந்தனர். ஆனால், அவர் அண்மையில் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், மனைவிகள் கணவனுக்காக செய்யும் வரலெட்சுமி விரத பூஜையை செய்து கழுத்தில் தாலியுடன் நிற்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். 2020ம் ஆண்டிலேயே தனது காதலர் ராகுலை அறிமுகம் செய்து வைத்த சரண்யா, கடந்த மாதம் ராகுலின் பிறந்தநாளன்று ஹாப்பி பர்த்டே ஹஸ்பண்ட் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சரண்யா, ராகுலை திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.