‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் |

ஹிட் சீரியல்களில் ஒன்றான 'கண்ணான கண்ணே' சீரியலில் பப்லு, நித்தியா தாஸ், நிமிஷிகா, ராகுல் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகை நித்தியா தாஸ் யமுனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியின் சித்தியாக நடித்து வந்தார். அவரது கதாபாத்திரம் சீரியலில் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரிலிருந்து நித்தியா தாஸ் ஏன் விலகினார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இனி யமுனா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு, சின்னத்திரை வட்டாரங்களில் சோனியா போஸ் நடிப்பார் என பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கண்ணானே கண்ணே தொடர் இதுவரை 300 எபிசோடுகள் வெற்றிகரமாக கடந்துள்ளது.




