சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் |
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று வெளியேறியுள்ளார் அக்ஷரா. மாடல் மற்றும் நடிகையான இவர், தமிழ்நாட்டு மக்களிடம் முன்னதாக பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆனால், சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சி அக்ஷராவுக்கு அடையாளத்தை பெற்று தந்துள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவை சமூக வலைத்தளம் தொடங்கி ஊடகம் வரை அனைவரும் பின் தொடர்கின்றனர். அந்த வகையில் அவர் தற்போது கொடுத்துள்ள பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரகசியத்தை எதார்த்தமாக உடைத்துள்ளார்.
அந்த பேட்டியில், அக்ஷராவிடம், வருணுக்கு பிக்பாஸ் வீட்டில் படுக்கையறையில் முத்தம் கொடுத்தது பற்றி கேள்வி கேட்கப்படுகிறது அதற்கு பதிலளித்த அக்ஷரா, 'நான் வருணுக்கு முத்தம் கொடுக்கல. பெக் தான் பண்ணேன். அதுவும் வருண் போட்டுருந்த ஷர்ட் ஹூட் மேல பெக் பண்ணேன். ஆனால், பிக்பாஸ்ல அப்படியா காமிச்சாங்க?' என கேட்டுள்ளார்.
வருண் மற்றும் அக்ஷரா பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். வெளியில் வந்த பிறகும் இருவரும் அடிக்கடி பொது இடங்களில் சந்தித்து வருகின்றனர். இதனால் இவர்கள் காதலிக்கிறார்களா? என்ற வதந்தியுடன் பிக்பாஸ் முத்த சர்ச்சையும் சேர்ந்து கொண்டது. ஆனால், அதற்கான சரியான சரியான விளக்கத்தை அக்ஷரா தற்போது கொடுத்துள்ளார்.