பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
விஜய் டிவியின் புதிய சீரியலில் பிரஜினும், சரண்யா துராடியும் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து ரசிகர்கள் 'இனி இவங்க தான் டிரெண்டிங் ஜோடி' என சோஷியல் மீடியாவை கலங்கடித்து வருகின்றனர்.
பிரபல நடிகர்களான பிரஜின் மற்றும் சரண்யா துராடி எப்போது மீண்டும் சின்னத்திரையில் நடிப்பார்கள் என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் 'வைதேகி காத்திருந்தால்' என்ற புதிய சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்ப தயாராகி வருகிறது. இதில் பிரஜின் நாயகனாகவும், சரண்யா துராடி நாயகியாகவும் நடிக்கின்றனர். ஏற்கனவே விஜய் டிவியில் தொடரில் நடித்து ரசிகர்களிடம் அதிக செல்வாக்கை பெற்ற இந்த இரு பிரபலங்களும் ஒரே சீரியலில் இணைந்து நடிக்கப்போவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இயக்குனரான சிவசேகர் தான் இந்த சீரியலையும் இயக்கவுள்ளார். எனவே, இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு பெருகி வருகிறது. இந்த தொடர் குறித்த கூடுதல் தகவல்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.