புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
டிக்டாக் பிரபலமான ஷோபனாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'முத்தழகு' தொடரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் சரியாக பயன்படுத்தி மக்கள் மனதில் முத்தழகாகவே இடம்பிடித்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முத்தழகு சீரியல் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து ஷோபனாவை மீண்டும் சின்னத்திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் விஜய் டிவியிலேயே ஷோபனா கம்பேக் கொடுத்துள்ளார். புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'பூங்காற்று திரும்புமா' என்கிற தொடரில் ஷோபனா ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மோதலும் காதலும் தொடரில் நடித்த சமீர் ஹீரோவாக நடிக்கிறார். இதனையடுத்து ஷோபனாவின் ரசிகர்கள் அவரது புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.