32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் ஆலியா மானசா. அதோடு அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியா மானசாவுக்கு தற்போது ஒரு மகனும், மகளும் உள்ளார்கள். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் ஒரு புதிய வீடு கட்டியிருப்பதாக தெரிவித்திருந்த ஆலியா மானசா, தற்போது கேரளா ஆலப்புழாவில் இரண்டு கோடி மதிப்பில் போட் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஆலப்புழா சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் இதன் மூலம் அவருக்கு பெரிய அளவில் வருமானம் வரும் என்று கூறப்படுகிறது. இந்த போட் ஹவுஸ், இரண்டு படுக்கை அறை, பிரமாண்ட டைனிங் டேபிள் என நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.