புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஜி தமிழின் செம்பருத்தி தொடர் தமிழ் சின்னத்திரையில் டாப் ஹிட் சீரியலாக பல நாட்கள் வலம் வந்தது. செம்பருத்தி தொடரின் ஆதி-பார்வதி இடையேயான காதல் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு பல காதல் ஸ்டேட்டஸ்களுக்கு ஆதி-ஷபானா கெமிஸ்ட்ரி டெம்பிளேட் ஆக மாறியது. இது, தொடரின் டிஆர்பிக்கும் முக்கிய காரணமாக இருந்தது வந்தது. இந்நிலையில் கார்த்திக் ராஜ் செம்பருத்தி தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இதனையடுத்து ஆதி கதாபாத்திரத்தை பிரபல விஜே அக்னி ஏற்று நடித்து வருகிறார். ஆனால், கார்த்திக் ராஜ் விலகிய நாள் முதல் செம்பருத்தி தொடர் சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.
கதைக்களத்தில் பல ட்விஸ்டுகளையும் வித்தியாசமான முயற்சிகளையும் சீரியல் குழுவினர் எடுத்து வந்தாலும் செம்பருத்தி தொடரால் பழைய இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது கதையின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் புதிதாக ஒரு அம்மன் எபிசோடை ஜி தமிழ் முயற்சி செய்யவுள்ளது. அதில், அகிலாண்டேஸ்வரிக்காக மிகவும் கஷ்டமான பரிகாரம் ஒன்றை பார்வதி செய்ய, பார்வதிக்கு உதவும் பொருட்டு ஒன்பது அம்மன்கள் வருவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த ஒன்பது அம்மன்களாக தேவயாணி, நக்ஷத்திரா, ரக்ஷா ஹோலா, தர்ஷனா அசோகன், கீர்த்தனா பொதுவல் உள்ளிட்ட ஜி தமிழின் முன்னணி சீரியல்களில் கதாநாயகிகளாக நடித்து வரும் நடிகைகள் தோன்றவுள்ளனர். இதன் மூலம் மற்ற சீரியல்களின் ஆடியன்ஸ்களையும் செம்பருத்தி சீரியலை பார்க்க வைக்கும் யுக்தியை ஜி தமிழ் முயற்சி செய்யவுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ஜி தமிழ் டிவி நேயர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சரிந்த தொடரை சக்சஸ் பாதைக்கு அழைத்து செல்ல இந்த ஒன்பது நாயகிகள் உதவுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.