கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
ஜீ தமிழ் சேனலில் கடந்த 20ம் தேதி முதல் 'கெட்டிமேளம்' மற்றும் 'மனசெல்லாம்' என இரண்டு புதிய தொடர்கள் ஒளிப்பாகிறது. மதியம் 2.30 மணிக்கு 'மனசெல்லாம்' தொடரும், இரவு 7.30 மணிக்கு 'கெட்டிமேளம்' தொடரும் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த தொடர்கள் ஒளிபரப்பாகும்.
மனசெல்லாம் தொடர் விருதுநகர் அருகே உள்ள ஒரு அழகிய கிராமத்தில் நடக்கும் கதை. குடும்பத் தலைவரான ராஜ சுந்தரம், தனது குடும்பத்தில் இரண்டு திருமணங்களை ஏற்பாடு செய்யத் திட்டமிடுகிறார். அதில் ஒரு திருமணத்தின் மணப்பெண் ஒரு காதலில் இருப்பதால் இரு திருமணங்களுமே சிக்கலாகிறது. இதனை எப்படி சமாளித்து திருமணத்தை அவர் நடத்துகிறார் என்பது கதை. தீபக், ஜெய்பாலா மற்றும் வானதி ஆகியோர் நடிக்கிறார்கள்.
கெட்டிமேளம் தொடரின் நாயகன் பொன்வண்ணன். நாயகி பிரவீணா. இவர்களுக்கு தங்களின் கனவு வீட்டை கட்டுவதும், தங்கள் மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதும்தான் இலக்கு. அதை நோக்கி எப்படி பயணிக்கிறார்கள் என்பது கதை. சாயா சிங், சவுந்தர்யா ரெட்டி, சிபு சூர்யன் மற்றும் விராத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.