வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? |
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் சீசன் சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து மிர்ச்சி செந்தில் நாயகனாகவும், ரச்சிதா மஹாலெட்சுமி நாயகியாகவும் நடித்து வரும் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக 300 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்த ரச்சிதா தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக தொடரிலிருந்து திடீரென விலகிவிட்டார்.
ரச்சிதா விலகியதையடுத்து அடுத்தது மஹாலெட்சுமியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வந்தனர். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் புது மஹாலெட்சுமியாக அரண்மனை கிளி மோனிஷா நடிக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் பரவிய வண்ணம் உள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் ரச்சிதாவை போல் மோனிஷாவால் நடிக்க முடியுமா? ரச்சிதா வேற லெவல் நடிகையாச்சே என பேசி வருகின்றனர். ஆனால், மோனிஷா 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வில் நடிப்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.