'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் சீசன் சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து மிர்ச்சி செந்தில் நாயகனாகவும், ரச்சிதா மஹாலெட்சுமி நாயகியாகவும் நடித்து வரும் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக 300 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்த ரச்சிதா தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக தொடரிலிருந்து திடீரென விலகிவிட்டார்.
ரச்சிதா விலகியதையடுத்து அடுத்தது மஹாலெட்சுமியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வந்தனர். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் புது மஹாலெட்சுமியாக அரண்மனை கிளி மோனிஷா நடிக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் பரவிய வண்ணம் உள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் ரச்சிதாவை போல் மோனிஷாவால் நடிக்க முடியுமா? ரச்சிதா வேற லெவல் நடிகையாச்சே என பேசி வருகின்றனர். ஆனால், மோனிஷா 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வில் நடிப்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.