சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் சீசன் சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து மிர்ச்சி செந்தில் நாயகனாகவும், ரச்சிதா மஹாலெட்சுமி நாயகியாகவும் நடித்து வரும் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக 300 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்த ரச்சிதா தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக தொடரிலிருந்து திடீரென விலகிவிட்டார்.
ரச்சிதா விலகியதையடுத்து அடுத்தது மஹாலெட்சுமியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வந்தனர். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் புது மஹாலெட்சுமியாக அரண்மனை கிளி மோனிஷா நடிக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் பரவிய வண்ணம் உள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் ரச்சிதாவை போல் மோனிஷாவால் நடிக்க முடியுமா? ரச்சிதா வேற லெவல் நடிகையாச்சே என பேசி வருகின்றனர். ஆனால், மோனிஷா 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வில் நடிப்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.