துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
அருவி படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை அதிதி பாலன் ஜெயா டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகவுள்ளார்.
தமிழ் சினிமாவில் 'அருவி' என்ற ஒரே படத்தில் நடித்து தமிழில் முன்னணி நடிகைகளுக்கு இணையான இடத்தை பிடித்தவர் நடிகை அதிதி பாலன். தொடர்ந்து வெள்ளித்திரையில் டாப் லிஸ்டில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்களில் அவர் கமிட்டாகவில்லை. இந்நிலையில் அவர் ஜெயா டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமாகவுள்ளார். பரதநாட்டிய டான்ஸரான அதிதி பாலன் ஜெயா டிவியின் 'தக திமி தக ஜனு' என்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சி முன்னதாக 'தக திமி தா' என்ற பெயரில் ஒளிபரப்பபட்டு 500 எபிசோடுகளை கடந்து தேசிய அளவில் சிறந்த நடன நிகழ்ச்சிக்கு வழங்கப்படும் ராபா விருதை பெற்றது. 'தக திமி தா' நிகழ்ச்சியை முன்னதாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளான ஷோபனா, சுதா சந்திரன், பானுப்ரியா, சுகன்யா, மோகினி, அன்னி மாளவிகா உள்ளிட்ட பலர் தொகுத்து வழங்கியுள்ளனர்.
தற்போது புத்தம் புது வடிவில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ள 'தக திமி தக ஜனு' நிகழ்ச்சியை நடிகை அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.