கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர், 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கன்னடத்தில் போதிய வாய்ப்பில்லாததால் தெலுங்கு பக்கம் வந்த ராஷ்மிகா, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிவிட்டார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட், நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
தற்போது இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில்பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான கார்த்தியின் 'சுல்தான்' படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அண்மையில் கூட இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய நடிகைகளை ஓரங்கட்டி சாதனை படைத்தார் ராஷ்மிகா.
தற்போது தெலுங்கில் 'ஆடவல்லு மீக்கு ஜோகர்லு' என்ற படத்தில் நடித்து வருகிறார். சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ராதிகா, குஷ்பு, ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது நடிகை ராதிகா மற்றும் ஊர்வசி செய்யும் சேட்டைகளை ராதிகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'நவராத்திரி சுபராத்திரி கலைமகளும்' என்ற பாடலுக்கு ராதிகா மற்றும் ஊர்வசி முகபாவனை செய்து ராஷ்மிகாவை கொஞ்சிக்கொண்டே பாடுகின்றனர். இருவருக்கும் இடையில் நிற்கும் ராஷ்மிகா இருவரின் சேட்டையையும் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்.