போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம்நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். நேற்று வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான இப்படம் கொரானா நேரத்தில் பல்வேறு சிக்கலை சந்தித்தது. இதையடுத்து ஓடிடியில் வெளியாகும் என பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இப்படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று படக்குழு அறிவித்தது. இதையொட்டி நேற்று வெளியான டாக்டர் படத்தின் முதல்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் திரையரங்கு ஒன்றிற்கு சென்று பார்த்துள்ளனர்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், நாளை என்றும் நம்கையில் இல்லை, நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே.. என்றால் கூட போராடு நண்பா, என்றைக்கும் தோற்காது உண்மைகளே.. எதிர் நீச்சலடி, வென்று ஏற்று கொடி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.