மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தபட அறிவிப்பு வெளியான சமயத்தில் ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யாவும் ‛பொன்னியின் செல்வன்' நாவலை அதேபெயரில் வெப்சீரிஸாக எடுக்கப்போவதாக அறிவித்தார். அதன்பிறகு இந்த வெப்சீரிஸ் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் ‛புது வெள்ளம்' என்ற பெயரில் பொன்னியின் செல்வன் முதல் சீசன் துவங்க உள்ளதாக சவுந்தர்யா அறிவித்து தனது குழு உடன் இருக்கும் போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். விரைவில் இதற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளது.