புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தற்போது ஒரே சமயத்தில் நான்கு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது அந்த டிவி நிறுவனம். அதில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் மற்றும் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் ஆகிய நான்கு படங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தை எட்டியுள்ளன.
அந்த வகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல விஜய்யின் பீஸ்ட் படமும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்பதும் கிட்டத்தட்ட ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்தநிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக டிசம்பர் 24ஆம் தேதி அன்றும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை காதலர் தின கொண்டாட்டமாக பிப்ரவரி 11ம் தேதியன்றும் வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த நான்கு படங்களுமே பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை குறிவைத்து ரிலீஸ் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.