மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தற்போது ஒரே சமயத்தில் நான்கு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது அந்த டிவி நிறுவனம். அதில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் மற்றும் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் ஆகிய நான்கு படங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தை எட்டியுள்ளன.
அந்த வகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல விஜய்யின் பீஸ்ட் படமும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்பதும் கிட்டத்தட்ட ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்தநிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக டிசம்பர் 24ஆம் தேதி அன்றும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை காதலர் தின கொண்டாட்டமாக பிப்ரவரி 11ம் தேதியன்றும் வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த நான்கு படங்களுமே பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை குறிவைத்து ரிலீஸ் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.