'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி |
மலையாள திரையுலகில் வில்லன், குணச்சித்திர மற்றும் கதையின் நாயகன் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியான சமயத்தில் அதில் விஜய்யின் நடிப்பு, பல காட்சிகளில் அவரது ரியாக்ஷன் ஆகியவை குறித்து விமர்சித்ததோடு, தன்னை அந்தப்படத்தில் மோசமாக காட்டியதற்காக இயக்குனர் நெல்சன் மீது விமர்சனங்களையும் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு அதற்காக வருத்தம் தெரிவித்தும் பேட்டி கொடுத்தார்.
திரையுலகில் நடிகர்களின் சம்பள விஷயத்தில் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது என்பது குறித்து அவ்வபோது பேசி வருகிறார் ஷைன் டாம் சாக்கோ. அதேபோல சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் மீண்டும் இந்த சம்பள விவகாரம் குறித்து கூறும்போது, ''இங்கே ஒரு நடிகருக்கான சம்பளம் என்பது அவர் ஆணா பெண்ணா என்பதை பொருத்தோ, அவரது நடிப்புத் திறமையை பொருத்தோ கொடுக்கப்படுவதில்லை. யார் அதிக கூட்டத்தை தியேட்டருக்கு இழுக்கிறார்களோ, யார் சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்த்தில் வருவார்களோ அவர்களுக்கு மட்டும்தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.
விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதால் அவர் மம்முட்டி, மோகன்லாலை விட சிறந்த நடிகரா? எதற்காக மோகன்லால், மம்முட்டி, கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகர்களுக்கு சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்'' எனக் கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும் தேவையில்லாமல் விஜய் பற்றி எதற்காக பேசுகிறீர்கள் என இன்னொரு பக்கம் அவருக்கு கண்டனங்களும் குவிகின்றன.