ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
மலையாள திரையுலகில் வில்லன், குணச்சித்திர மற்றும் கதையின் நாயகன் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியான சமயத்தில் அதில் விஜய்யின் நடிப்பு, பல காட்சிகளில் அவரது ரியாக்ஷன் ஆகியவை குறித்து விமர்சித்ததோடு, தன்னை அந்தப்படத்தில் மோசமாக காட்டியதற்காக இயக்குனர் நெல்சன் மீது விமர்சனங்களையும் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு அதற்காக வருத்தம் தெரிவித்தும் பேட்டி கொடுத்தார்.
திரையுலகில் நடிகர்களின் சம்பள விஷயத்தில் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது என்பது குறித்து அவ்வபோது பேசி வருகிறார் ஷைன் டாம் சாக்கோ. அதேபோல சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் மீண்டும் இந்த சம்பள விவகாரம் குறித்து கூறும்போது, ''இங்கே ஒரு நடிகருக்கான சம்பளம் என்பது அவர் ஆணா பெண்ணா என்பதை பொருத்தோ, அவரது நடிப்புத் திறமையை பொருத்தோ கொடுக்கப்படுவதில்லை. யார் அதிக கூட்டத்தை தியேட்டருக்கு இழுக்கிறார்களோ, யார் சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்த்தில் வருவார்களோ அவர்களுக்கு மட்டும்தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.
விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதால் அவர் மம்முட்டி, மோகன்லாலை விட சிறந்த நடிகரா? எதற்காக மோகன்லால், மம்முட்டி, கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகர்களுக்கு சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்'' எனக் கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும் தேவையில்லாமல் விஜய் பற்றி எதற்காக பேசுகிறீர்கள் என இன்னொரு பக்கம் அவருக்கு கண்டனங்களும் குவிகின்றன.