ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தொகுப்பாளினியான அர்ச்சனா, பிக்பாஸ்-4 நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில் அர்ச்சனாவுக்கு மூளை அருகே ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதையடுத்து வீடு திரும்பியவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து தற்போது ஒருதகவல் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. அதில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு 10 நாட்களுக்கு பிறகு தான் வீடு திரும்பினேன். எனது மூக்கு வழியாகத்தான ஆபரேசன் நடைபெற்றது. அதனால் பழைய குரல் இன்னும் வரவில்லை. அது வெயிட் குறந்து விட்டேன். தற்போது மீட்புக்கான கடின பாதையில் இருக்கிறேன்.
வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் நான் அதை மாற்ற விரும்புகிறேன், இன்றே முழுமையாக வாழுங்கள், ஏனென்றால் நாளை இருக்குமா என்று உங்களுக்குத்தெரியாதுஎன்று தெரிவித்துள்ள அர்ச்சனா, 24 மணி நேரமுக் கண் தூங்காமல் தன்னை கவனித்துக்கொண்ட நர்ஸ்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு நான் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு வழக்கம் போல் மீடியா பணிகளுக்கு திரும்பி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.