மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் | முகத்தை காட்டாமல் நடித்து இருக்கும் புதுமுக நாயகன், நாயகி | நிறைய பாலியல் தொல்லை : பாடகி ஜொனிடா காந்தி |
தொகுப்பாளினியான அர்ச்சனா, பிக்பாஸ்-4 நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில் அர்ச்சனாவுக்கு மூளை அருகே ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதையடுத்து வீடு திரும்பியவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து தற்போது ஒருதகவல் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. அதில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு 10 நாட்களுக்கு பிறகு தான் வீடு திரும்பினேன். எனது மூக்கு வழியாகத்தான ஆபரேசன் நடைபெற்றது. அதனால் பழைய குரல் இன்னும் வரவில்லை. அது வெயிட் குறந்து விட்டேன். தற்போது மீட்புக்கான கடின பாதையில் இருக்கிறேன்.
வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் நான் அதை மாற்ற விரும்புகிறேன், இன்றே முழுமையாக வாழுங்கள், ஏனென்றால் நாளை இருக்குமா என்று உங்களுக்குத்தெரியாதுஎன்று தெரிவித்துள்ள அர்ச்சனா, 24 மணி நேரமுக் கண் தூங்காமல் தன்னை கவனித்துக்கொண்ட நர்ஸ்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு நான் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு வழக்கம் போல் மீடியா பணிகளுக்கு திரும்பி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.