வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

அண்ணாத்த, நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்துவிட்ட நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் நடித்துள்ள நெற்றிக்கண் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும், தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழா மற்றும் மீடியா பிரமோஷன்களில் கலந்து கொள்ளாத நயன்தாரா, பத்திரிகை மற்றும் மீடியா பேட்டிகளையும் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவரை விஜய் டிவிக்காக ஒரு பேட்டி எடுத்துள்ளார் திவ்யதர்ஷினி. இந்த பேட்டி ஆகஸ்ட் 15-ந்தேதி ஒளிபரப்பாக உள்ளது. அந்த பேட்டியின் பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், தனக்கும் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதை உறுதிபடுத்தியுள்ள நயன்தாரா, விக்னேஷ்சிவனிடம் அனைத்து விசயங்களுமே தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவ்வப்போது நெருக்கமாக எடுத்த செல்பி போட்டோக்களை பதிவிட்டும் வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா கொச்சி சென்றபோது அங்கு நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




