50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் |

பெரும்பாலான நடிகைகள் ரியஸ் எஸ்டேட், தங்க நகைகளில் முதலீடு செய்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் சிலவற்றில் முதலீடு செய்திருந்தாலும் தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அதோடு அவர் சாய்வாலே என்ற டீ நிறுவனத்தில் ஒரு பங்குதாரராகி முதலீடு செய்திருக்கிறார்.
வட இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் விரைவில் சென்னை, பெங்களூர் உள்பட தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் தங்களது 35 கிளைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்காரணமாக ரூ. 5 கோடியை முதலீட்டாளர்களிடம் எதிர்பார்க்கும் இந்த சாய்வாலே டீ நிறுவனம் மேலும் சில நிறுவனங்களையும் தங்களது பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டு வருகிறது. இதில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவனும் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளனர்.




