துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பைசா படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரா. அதன்பிறகு ஒன்வே, தேவதாஸ் பிரதர்ஸ், குழலி படங்களில் நடித்தார். இந்த படங்கள் வெளிவரவில்லை. தற்போது காதல் புதிது என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆரா எதிர்பார்ப்பதெல்லாம் குழலி படத்தின் வெளியீட்டை. காரணம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை பெற்று வரும் அந்த படம் தனக்கு நல்ல திருப்பம் தரும் என்று நம்புகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: குழலியில் நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ் ஜோடியாக நடித்திருக்கிறேன். ஒரு கிராமத்து பெண்ணின் கல்வி கனவுகளை சொல்லும் படம் அது. அந்த படம் பல விருதுகளை குவித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில்கூட இந்தோ பிரஞ்ச் பட விழாவில் சிறந்த படம், சிறந்த இசை விருதுகளை பெற்றது. இந்த படம் தமிழ்நாட்டில் வெளிவரும்போது எனக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார்.