துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தெலுங்கு நடிகர் சங்கத்தில் தற்போது நிர்வாகிகளாக உள்ளவர்களின் பதவிகாலம் முடிகிறது. இதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ், விஷ்ணு மஞ்சு, நரசிம்மராவ், நடிகைகள் ஜீவிதா ராஜசேகர், புஷ்பா, ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் கன்னடர் பிரகாஷ்ராஜ் போட்டியிடக்கூடாது என்று அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனை பலரும், நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறி வருகிறார்கள். பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாராவ், பிரகாஷ்ராஜின் பெயரை குறிப்பிடாமல் கூறியிருப்பதாவது:
தெலுங்கு நடிகர் சங்கத்தில் போட்டியிடுகிறவர்கள் தெலுங்கர்களாக இருக்க வேண்டும். கன்னடத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள நடிகர் சங்கத்திற்கு போட்டியிட வேண்டும். இங்கே போட்டியிட பிறருக்கு உரிமை இல்லை. தெலுங்கு பட உலகை சேர்ந்த சிலர், பிற மாநில நடிகர்களுக்கு ஆதரவு கொடுப்பது ஏன்? என்று புரியவில்லை. தெலுங்கு நடிகர் சங்கத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்தவரே தலைவராக இருக்க வேண்டும். என்கிறார் கோட்டா சீனிவாசராவ்.
முன்னணி நடிகரான என்.டி.பாலகிருஷ்ணா நடிகர் விஷ்ணு மஞ்சுவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். விஷ்ணு மஞ்சு பாரம்பரிய சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு தனது சொந்த பணத்தில் கட்டிடம் கட்டுவார். அவர் தலைவர் ஆனால் நானும் பணம் கொடுப்பேன். தலைவர் பதவிக்கு வலுவானவர்களே வர வேண்டும். என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பிரகாஷ்ராஜூக்கு ஆதரவு தெரிவித்திருப்பது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சிரஞ்சீவி குடும்பத்தினர் தெலுங்கு சினிமாவில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதால் அவர் கைகாட்டுகிறவரே வெற்றி பெறுவார் என்கிறார்கள்.