ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ்த் திரையுலகின் சீனியர் கதாநாயகியும், பாஜகவின் முக்கிய உறுப்பினர் ஆகவும் உள்ள குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தான் இன்றைய சமூக வலைத்தள வட்டாரங்களில் முக்கிய பரபரப்பாக உள்ளது.
அதன்பின் குஷ்பு தரப்பிலிருந்து இந்த 'ஹேக்' குறித்து டுவிட்டர் தரப்பிடம் புகார் அளிக்கப்பட்டது. தற்போது குஷ்புவின் கணக்கு மீட்கப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட போது அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பழைய பதிவுகளும் தற்போது அந்த கணக்கில் காணப்படுகிறது.
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவரது கணக்கு முதல் முறையாக ஹேக் செய்யப்பட்டது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். கொரானோ முதல் அலை வந்த போது அவர் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து பதிவிட்டு வந்தார். அந்த சமயத்தில் அவரது கணக்கை யாரோ ஹேக் செய்தார்கள். அதன்பின் அவரது கணக்கை மீட்டெடுத்தார்.
அவர் தற்போது பாஜகவில் இருக்கும் போதும் அவரது கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளார்கள். அரசியல் மற்றும் சினிமா பிரபலமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது சமூக வலைத்தளங்களில் உள்ள பாதுகாப்பாற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட டுவிட்டர் நிறுவனங்கள் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.