தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து |
தமிழ்த் திரையுலகின் சீனியர் கதாநாயகியும், பாஜகவின் முக்கிய உறுப்பினர் ஆகவும் உள்ள குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தான் இன்றைய சமூக வலைத்தள வட்டாரங்களில் முக்கிய பரபரப்பாக உள்ளது.
அதன்பின் குஷ்பு தரப்பிலிருந்து இந்த 'ஹேக்' குறித்து டுவிட்டர் தரப்பிடம் புகார் அளிக்கப்பட்டது. தற்போது குஷ்புவின் கணக்கு மீட்கப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட போது அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பழைய பதிவுகளும் தற்போது அந்த கணக்கில் காணப்படுகிறது.
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவரது கணக்கு முதல் முறையாக ஹேக் செய்யப்பட்டது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். கொரானோ முதல் அலை வந்த போது அவர் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து பதிவிட்டு வந்தார். அந்த சமயத்தில் அவரது கணக்கை யாரோ ஹேக் செய்தார்கள். அதன்பின் அவரது கணக்கை மீட்டெடுத்தார்.
அவர் தற்போது பாஜகவில் இருக்கும் போதும் அவரது கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளார்கள். அரசியல் மற்றும் சினிமா பிரபலமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவது சமூக வலைத்தளங்களில் உள்ள பாதுகாப்பாற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட டுவிட்டர் நிறுவனங்கள் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.