புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
'இந்தியன் 2' பட விவகாரத்தில் தங்களது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கர் போகக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைகா வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் காரணமாக ஷங்கர், ராம் சரண் கூட்டணி சேர உள்ள தெலுங்குப் படத்திற்கான சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. வழக்கின் காரணமாக இப்படத்தை ஷங்கர் இயக்குவாரா மாட்டாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. ராம் சரண் கூட ஷங்கருக்கு ஒரு வாரம் மட்டுமே டைம் கொடுத்ததாகவும் டோலிவுட்டில் சொன்னார்கள்.
தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் ராம் சரண் படத்தை ஷங்கர் தாராளமாக இயக்கலாம். இருப்பினும் 'இந்தியன் 2' படத்தைத் தயாரிக்க சுமார் 200 கோடி ரூபாய் செலவு செய்த தயாரிப்பாளரை ஷங்கர் தவிக்க விட்டுச் செல்வது குறித்து தமிழ் தயாரிப்பாளர்கள் சிலர் கொதிப்பில் இருக்கிறார்கள்.
சமீப காலமாக சில முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் தமிழ் தயாரிப்பாளர்களைப் புறக்கணித்து தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஷங்கர், விஜய், தனுஷ் ஆகியோரது அடுத்த படங்களை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.