காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தொண்ணூறுகளில் அறிமுகமாகி இளம்பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி.. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அரவிந்த்சாமி, அதில் வெற்றிக்கொடி நாட்டியதுடன், அதன் ரீமேக்காக தெலுங்கில் ராம்சரண் நடித்த துருவா' படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதன்பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்க துவங்கி விட்டார். இப்போது கூட அவர் ஹீரோவாக நடித்து அரை டஜன் படங்களுக்கு மேல் தயாராகி வருகின்றன.
இந்தநிலையில் மீண்டும் தெலுங்குப்படம் ஒன்றுக்காக ஸ்டைலிஷான வில்லனாக மாற இருக்கிறாராம் அரவிந்த்சாமி.. நாகார்ஜுனா-அமலாவின் வாரிசான அகில் நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்க உள்ளார் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி. ஆக்சன் கதையம்சத்துடன் உருவாகும் இந்தப்படத்தில் தான் வடிவமைத்த பவர்புல்லான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் சுரேந்தர் ரெட்டி..