சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிப்பில் 2015ல் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'தனி ஒருவன்'. அப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஜெயம் ரவி, நயன்தாரா நாயகன், நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவித்தார்கள். முதல் பாகத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரம் இறந்துவிட்டதால் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை. அந்தக் கதாபாத்திரத்தை விடவும் பவர்புல்லான ஒரு வில்லன் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் 'தனி ஒருவன் 2' படத்தை வாழ்த்தி அரவிந்த்சாமியும், கார்த்தியும் டுவீட் செய்துள்ளனர். “சூப்பர்ப் புரோமோ, குழுவினருக்கு வாழ்த்துகள்,” என அரவிந்த்சாமியும், “நீண்ட நாட்களாக காத்திருந்த அறிவிப்பு மச்சி... உனக்கும் உனது பிக் பிரதருக்கும் வாழ்த்துகள்,” என கார்த்தியும் வாழ்த்தியுள்ளனர். இருவருக்கும் இயக்குனர் மோகன்ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.




