பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
2003ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த 'ஜெயம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரவி. இப்போது, இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது, 'ஜெயம் ரவி' என்று சொன்னால் மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு தான் நாயகனாக அறிமுகமான முதல் படத்தின் பெயரே ரவிக்கு ஒரு அடையாளமாக மாறிப் போனது.
அப்பா தயாரிக்க, அண்ணன் இயக்க ஒரு குடும்பப் படத்தில்தான் அறிமுகமானார் ஜெயம் ரவி. அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அவரை தமிழ் சினிமாவில் 18 வருடங்கள் வெற்றிகரமாக நடைபோட உதவியுள்ளது. குடும்பமே கலைக்குடும்பமாக இருந்தாலும் தனித் திறமை இல்லை என்றால் இத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியாது.
அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்' என வெற்றி கொடுத்தாலும் ஆரம்ப காலங்களில் மற்ற இயக்குனர்களின் படங்களில் ஜெயம் ரவி நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 2009ம் ஆண்டில் வெளிவந்த 'பேராண்மை' படம் தான் அவருக்கு அந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்ந்தார்.
தொடர்ந்து வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணித்து வந்தாலும் அவருடைய மார்க்கெட்டை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். “நிமிர்ந்து நில், ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம், மிருதன், போகன், டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.
தற்போது 'ஜனகனமன, பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும் விதமான படங்களைக் கொடுப்பதே ஜெயம் ரவியின் தொடர்ச்சியான ஜெயத்திற்குக் காரணம்.