‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் ‛பாகமதி, துர்காமதி' படங்களை இயக்கிய ஜி. அசோக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "உப் யே சியாபா". நாளை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகர்கள் சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா பதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் நகைச்சுவை, த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஆனால் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் படத்தில் எந்தவொரு வசனமும் இல்லையாம். எந்த வசனங்களும் இல்லாமல் நகைச்சுவை மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது.
படம் பற்றி ரஹ்மான் கூறியதாவது: இந்த படத்தில் பணிபுரிவது சவாலானதாகவும், சுதந்திரமாகவும் இருந்தது. பெரும்பாலான படங்களில், வசனங்கள் முன்னுரிமை பெறுகின்றன, இசை ஒரு படி பின்வாங்குகிறது. ஆனால் இங்கே, இசையே கதையின் ஒரு பகுதி. புதிய பாணிகளைப் பரிசோதிப்பதை நான் உண்மையிலேயே ரசித்தேன், குறிப்பாக இந்த நகைச்சுவை-த்ரில்லர் வகை படமாக இருந்தது கூடுதல் சவாலாகவும் இருந்தது. லவ் ரஞ்சன் மற்றும் இயக்குனர் அசோக்குடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.