தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடித்தவர். 'விழா' படத்தில் ஹீரோ ஆனார், 'மாஸ்டர்' படத்திலும் முக்கியமான ரோலில் நடித்தார். இன்னும் சில படங்களிலும் ஹீரோவாக நடித்தவர். இப்போது அவர் தெலுங்கில் பிஸியான ஹீரோ. அடுத்த ஆண்டு தெலுங்கில் அவர் நடித்த 3 படங்கள் வர இருக்கிறது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கில் அவர் நடித்த படமான 'த்ரிகண்டா' விழாவில் அவர் பேசுகையில், ''நான் மாஸ்டர் படத்தில் நடித்ததால் மாஸ்டர் மகேந்திரன் அல்ல. அதற்குமுன்பே கே.எஸ்.ரவிகுமார் படங்களில் நடித்தபோது இந்த பட்டம் எனக்கு கிடைத்துவிட்டது. 1994ம் ஆண்டு நாட்டாமை படத்தில் அவர் கொடுத்தார். மாஸ்டர் படத்தில் நடித்ததும் மகிழ்ச்சி. அந்த படம் எனக்கு தெலுங்கில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதனால் அங்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழில் என் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. த்ரிகண்டா படத்துக்கு தியேட்டர்கள் தாருங்கள் என்று நான் கெஞ்சி கேட்கிறேன். தியேட்டர் கிடைத்தால்தானே எங்கள் படத்தின் அருமை, எங்கள் உழைப்பு மக்களுக்கு தெரியும். தெலுங்கில் சின்ன படங்களுக்கு கூட தியேட்டர் கிடைக்காது. அங்கே தியேட்டர் சென்று படம் பார்ப்பவர்கள் அதிகம்.
நான் திருமணம் செய்யவில்லை. இப்போதைக்கு வேண்டாம் என நினைக்கிறேன். என் போராட்டங்கள் முடிவடைந்து வெற்றி பெற்றவுடன் திருமணம் செய்வேன். ஒரு பொண்ணை திருமணம் செய்து, அவரை கஷ்டப்படுத்தக்கூடாது. தியேட்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை வைத்து படம் தயாரிக்க வந்தவர்களிடம் அவனுக்கு மார்க்கெட் இல்லையே என சிலர் சொன்னார்கள். அதை மீறி உழைக்கிறேன்'' என்றார்.