நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கடந்த 2016ம் ஆண்டில் பாஸ்டியன் என்ற உணவகத்தை மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் திறந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி. அதன் பிறகு அதே பாந்த்ராவில் ஒரு பெரிய இடத்துக்கு அது மாற்றப்பட்டு உணவு பிரியர்கள் மற்றும் பிரபலங்களுக்கான ஒரு இடமாக மாறியது.
இந்த நிலையில் தனது இணையப் பக்கத்தில் ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தனது மும்பை உணவகமான பாஸ்டியன் செப்டம்பர் 4ம் தேதியான நாளை மூடப்படுவதாக தெரிவித்திருக்கிறார். தனது நட்பு வட்டாரத்துக்கு இன்று அவர் ஒரு இரவு விருந்தும் கொடுக்கிறார். என்றாலும் எதற்காக அந்த ஓட்டல் மூடப்படுகிறது என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
மேலும் தற்போது ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் 60 கோடி ரூபாய் கடன் மற்றும் முதலீடு முறைகேட்டில் சிக்கி இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைக்காக கூட அவர்கள் அந்த ஹோட்டலை விற்பனை செய்யலாம் என்கிற கருத்துக்களும் வெளியாகி உள்ளன.