பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா, அவ்வப்போது தனது தாய் மொழியான மலையாளத்திலும், தெலுங்கிலும் நடிப்பார். அப்படி தெலுங்கில் 2012ம் ஆண்டு அவர் நடிக்க ஆரம்பித்த படம் 'ஆறடுகுலா புல்லட்'. இதில் நாயகனாக கோபிசந்த் நடித்துள்ளார்.
இப்படத்தை முதலில் தமிழ் இயக்குனரான பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். பின்னர் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பி.கோபால் படத்தை இயக்க ஆரம்பித்தார். ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து, 2017ல் இப்படத்திற்கான சென்சார் முடிந்தும் படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.
இப்போது அனைத்துப் பிரச்சினைகளையும் முடித்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்த பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம்.
நயன்தாரா நடித்த ஒரு படம் இத்தனை வருடங்கள் தாமதமாக வெளிவந்ததே இல்லை. தற்போதைக்கு தமிழில் மட்டுமே படங்களில் நடிக்க நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறாராம்.