ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா, அவ்வப்போது தனது தாய் மொழியான மலையாளத்திலும், தெலுங்கிலும் நடிப்பார். அப்படி தெலுங்கில் 2012ம் ஆண்டு அவர் நடிக்க ஆரம்பித்த படம் 'ஆறடுகுலா புல்லட்'. இதில் நாயகனாக கோபிசந்த் நடித்துள்ளார்.
இப்படத்தை முதலில் தமிழ் இயக்குனரான பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். பின்னர் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பி.கோபால் படத்தை இயக்க ஆரம்பித்தார். ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து, 2017ல் இப்படத்திற்கான சென்சார் முடிந்தும் படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.
இப்போது அனைத்துப் பிரச்சினைகளையும் முடித்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்த பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம்.
நயன்தாரா நடித்த ஒரு படம் இத்தனை வருடங்கள் தாமதமாக வெளிவந்ததே இல்லை. தற்போதைக்கு தமிழில் மட்டுமே படங்களில் நடிக்க நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறாராம்.