சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
டி.வியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த நயன்தாரா 2003ம் ஆண்டு 'மனசிலக்கரே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தார். அதன்பிறகு சில மலையாள படங்களில் நடித்திருந்த நிலையில்தான் இயக்குனர் ஹரி தனது 'ஐயா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். அதில் அவர் சரத்குமார் ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு 'சந்திரமுகி' படத்தில் அவர் நடித்தது பெரிய கேரக்டர் இல்லை என்றாலும் ரஜினி ஜோடி என்பது அவரது பலமாக இருந்தது. பிறகு நடித்த 'கஜினி' படம் அவருக்கு பெரிதாக உதவவில்லை. சாதாராண மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்தார்.
இனி இப்படியோ போனால் வேலைக்கு ஆகாது என்று நயன்தாரா கவர்ச்சியாக நடிக்க துணிந்தார். இதன் முதல் கட்டமாக 'சிவகாசி' படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடினார். அடுத்து அவர் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'கள்வனின் காதலி' படத்தின் மூலம்தான் முழுமையான கவர்ச்சிக்கு மாறினார். இந்த படத்தின் இயக்குனர் தமிழ்வண்ணன் என்றாலும், இது எஸ்.ஜே.சூர்யா படமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், நயன்தாராவும் ஒரே பேண்டை அணிந்து நின்ற காட்சி பெரிய பேனர்களாக வைக்கப்பட்டு படத்திற்கு பரபரப்பு கூட்டினர். பின்னர் படத்தில் நயன்தாராவும், எஸ்.ஜே.சூர்யாவும் நெருக்கமாக நடித்த காட்சிகள் பரபரப்பாகின. இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நயன்தாரா கேரியரில் முக்கியமான படமானது.
தற்போது இந்த படத்தை நவீன தொழில் நுட்பத்தில் ரீ ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.