ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சமீபகாலமாக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது அதிகரித்து விட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டில் ரஜினி, அஜித் என முன்னணி நடிகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருநபர் தான் இப்படியொரு தகவலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரிவித்ததாக தெரிய வந்தது.
இந்தநிலையில் நேற்று சென்னையில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதையடுத்து அஜித்தின் வீட்டிற்கு போலீசார் சோதனை செய்ததாகவும், ஆனால் அது புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.