பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில் வில்லன் நடிகரான சோனு சூட், ரியல் ஹீரோவாக மாறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். அந்தவகையில் தற்போது கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு, அவசிய தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறார் சோனு சூட். ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்வதற்காகவே கர்னூல் பகுதியில் தனியாக உற்பத்தி கூடமே ஆரம்பித்துள்ளார் சோனு சூட்.
இன்னொரு பக்கம் கொரோனாவால் இறக்கும் மக்களை உடனுக்குடன் தகனம் செய்யவோ அல்லது புதைக்கவோ முடியாமல் கால தாமதம் ஏற்படும் சூழல் பல கிராமங்களில் நிலவுகிறது. இதனை குறிப்பிட்டு சோனு சூட்டிடம் உதவி கேட்டு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களுக்கு இறந்த உடல்களை அவர்களுக்கான இறுதிச்சடங்கு நடக்கும் வரை பத்திரப்படுத்தி வைக்கும் விதமாக ப்ரீசர் பாக்ஸ் எனப்படும் குளிரூட்டும் பெட்டிகளை அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட்.