காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் உள்ள பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தவர் நடிகர் சோனு சூட். அவரது வீட்டில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனையில் 20 கோடிக்கும் அதிகமாக அவர் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “கடினமான சாலைகளில் கூட எளிதான பயணம் காணப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரின் பிரார்த்தனையும் ஒரு பலனைத் தருகிறது,” என ஹிந்தியில் டுவிட்டரில் குறிப்பிட்டு ஆங்கிலத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நீங்கள் எப்போதும் உங்கள் பக்கத்தைச் சொல்ல வேண்டியதில்லை, நேரம் வரும். இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக நான் எனது முழு வலிமையுடனும், இதயத்துடனும் உறுதியளித்துள்ளேன். தேவைப்படுபவர்களுக்கு, அவர்களது உயிரைக் காப்பாற்ற எனது அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் காத்திருக்கிறது.
எனது பங்களிப்பை 'பிராண்டு'கள் நன்கொடையாகத் தர வேண்டும் என ஊக்குவித்தேன், அதுதான் எங்களை செல்ல வைக்கிறது. கடந்த நான்கு நாட்களாக விருந்தினர்களை சந்திப்பதில் பிஸியாக இருந்தேன். மீண்டும் திரும்பி வந்துள்ளேன். உங்களுக்கான பணிவான சேவையில் எனது வாழ்க்கை, எனது பயணம் தொடரும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மீதான வரி ஏய்ப்பு புகாருக்கு பதிலளிக்கும் விதமாக அவரது அறிக்கை அமைந்துள்ளது. அவருடைய பதிவுக்கு ரசிகர்கள் லைக் செய்தும், ரிடுவீட் செய்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.