மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. சமீப காலங்களில் நாக சைதன்யாவுடன் அவரது திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு விதமான சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்றிருந்த போது அவரிடம் அது பற்றி கேள்வி கேட்ட நிருபர் ஒருவரையும் 'புத்தி இருக்கா' என கடுமையாகத் திட்டினார். திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் சாமி கும்பிட்ட சமந்தா அப்படியே தனது சொந்த ஊரான சென்னைக்கு வந்துள்ளார் எனத் தெரிகிறது.
அவருடைய தோழிகளான நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் 'வீக் என்ட்'டை கொண்டாடியுள்ளார். “கடந்த வாரம், அற்புதமான ஈவ்னிங்கிற்கு மிக்க நன்றி... த்ரிஷா, கீர்த்தி, கல்யாணி..” என இன்ஸ்டாவில் அவர்களுடன் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சமந்தா செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்த நிகழ்ச்சிக்கும் சமந்தா எந்த விதமான வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.