முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் |
சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பார்த்திபன் அவ்வப்போது தனது பதிவுகள் குறித்து நெட்டிசன்கள் கொடுக்கும் கமெண்டுக்கும் பதிலளித்து வருகிறார். தற்போது தனது டுவிட்டரில், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்பதை கூறும் வகையில், ‛‛நாளை சிரிக்க சிறக்க இன்றும் உள்ளிருப்போம் உறவே'' என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஒருவர், ‛உள்ளிருந்தால் உணவு யாரு தருவாங்க?' என்று ஒரு நெட்டிசன் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த பார்த்திபன், ‛‛சரியான செருப்படி கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கி விடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தால் உணவை உண்ண நாம் இருப்போம். நாளை இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்'' என்று அந்த நபருக்கு நச் பதில் கொடுத்துள்ளார் பார்த்திபன்.